Wednesday, 7 April 2010

கண்களைப் பேணும் காய்கறிகள்

நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் வழிகள் அடங்கி உள்ளன. பச்சை காய்கறிகளில் உயிர்ச்சத்து 'ஏ' வும் உயிர்ச்சத்து 'சி' யும், இரும்பு, 'கால்சியம்' ஆகிய சத்துகளின் முதன்மை மூலக்கூறுகள் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, 'போலிக்' அமிலம் , உயிர்ச்சத்து 'பி-12' ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் 'சாலட்டும்' எலுமிச்சையும் நம் பார்வையைப் பெரிதும் கூர்மையாக்குகிறது.


உயிர்ச்சத்து 'ஏ'யில் கண்ணையும் மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள 'ரோடோஸ்பின்' என்ற புரதத்தில் உயிர்ச்சத்து ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உயிர்ச்சத்து 'ஏ'  பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். செம்முள்ளங்கி அதிகமான உயிர்ச்சத்து 'ஏ' உள்ளது. உயிர்ச்சத்து 'ஏ' வாக நம் உடலில் மாற்றம் அடையும் 'பீட்டா கரோடின்', அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் உயிர்ச்சத்து ஏ உள்ளது. தக்காளி, பசலை, 'லிவர்', முட்டை, நிறமயமான காய்கறிகள், செம்முள்ளங்கி, பப்பாளி, பச்சை இலைகள் போன்றவற்றில் உள்ளது.


உடலில் அதிகமாக சுரக்கும் 'குளூக்கோஸினால்' கண்திரை சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. இறைச்சி, மீன், பால் நமக்குத் தேவையான 8 முக்கிய 'அமினோ' அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, 'பீன்சு', அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

No comments: